திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!
திருச்சி: முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணம் செய்த ரயில் டிக்கெட் கண்காணிப்பாளருக்கும், ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்தவருக்கும் இடையே அடிதடி நடந்தது.
டிக்கெட் கண்காணிப்பாரை ரயில்வே போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரித்தபோது அவரை விடுவிக்க முயன்ற ரயில்வே ஊழியர்களைக் கலைக்க ரயில்வே போலீசை படையைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டார்.
சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மணிமந்திரன்.
ரயில் விழுப்புரம்-விருத்தாச்சலம் இடையே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ரகுராமன் என்ற ரயில்வே டிக்கெட் கண்காணிப்பாளரை எழுப்பி அடையாளம் கேட்டார்.
அவர், தான் ஒரு ரயில்வே கண்காணிப்பாளர் என்றும், லீவில் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அடையாள அட்டை கேட்கவே அதையும் காட்டினார்.
ஆனால், திருப்தியடையாத மணிமந்திரன் அவரை மேலும் குடையவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இந் நிலையில் ரயில் திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ரகுராமனை இறக்கிய மணிமந்திரன், அவரை ரயில்வே போலீஸ் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றார்.
அங்குள்ள கேஷ் கார்ட் ரூமில் வைத்து அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதையறிந்த ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு விரைந்தனர். ரகுராமனுக்கு ஆதரவாக வாதாடிய அவர்களுக்கும் ரயில்வே போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து மணிமந்திரனை அவர்கள் தாக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து தனது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார் மணி. இதனால் சிதறி ஓடிய ரயில்வே ஊழியர்கள் மீண்டும் அங்கு வந்து மணியை தாக்க முயன்றனர்.
அவர் தப்பியோடியதையடுத்து கேஷ் கார்ட் அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர்.
இச் சம்பவம் தொடர்பாக மணிமந்திரனும், ரகுராமனும் கண்டோன்மெண்ட் ரயில்வே காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் கொடுத்துள்ளனர்.
ரயில் நிலைத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications