ஆசிரியர் பள்ளி மாணவர்கள் போராட்டம்-சிபிஐ ஆதரவு
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்து அசூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அசூரில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி இயங்கி வந்தது. இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்த 92 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி கிடைக்கவில்லை.
இதை கண்டித்து மாணவ, மாணவிகள் கடந்த 22ம் தேதி முதல், பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போராடத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு நேரில் சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட 92 மாணவ, மாணவிகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஏமாற்றியுள்ளது. அவர்கள் மீண்டும் கல்வியை தொடர வலியுறுத்தி ஆகஸ்ட் 11ம் தேதி அனைத்து கட்சி சார்பில் சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications