கர்ப்பிணி கற்பழிப்பு-மந்திரவாதிக்கு 17 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: கர்ப்பிணி பெண்ணை கற்பழித்த மந்திரவாதிக்கு 17 ஆண்டு சிறை ஜெயில் தண்டனை விதித்து ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உடந்தையாக இருந்த அவரது மனைவிக்கு 10 ஆண்டு சிரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாதவன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

விஜயலட்சுமிக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு பூஜை செய்து, மந்திரம் போட்டால் குணமாகிவிடும் என்று மாதவனிடம் கூடலூர் அருகே உள்ள நாடுகாணியைச் சேர்ந்த மந்திரவாதி மோகன் என்ற மோகன்ராஜ் கூறினார்.

இதை நம்பிய மாதவன் தனது கர்ப்பிணி மனைவி விஜயலட்சுமியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேதி மந்திரவாதி மோகன்ராஜ் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு இரவு மது மற்றும் கோழியுடன் பூஜை நடத்தப்பட்டது.

கோழியை பலியிட்ட பிறகு, மதுவை மாதவனுக்கு குடிக்க கொடுத்தனர். மது அருந்திய மாதவன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

பின்னர் நிர்வாண பூஜை செய்வதாக கூறி விஜயலட்சுமியை மோகன்ராஜ் கற்பழித்தார். அதற்கு மோகன்ராஜ் மனைவி பாக்கியம் உடந்தையாக இருந்தார்.

மயக்கம் தெளிந்த மாதவன், விஜயலட்சுமியுடன் சென்று போலீசில் புகார் செய்தார். மனைவியுடன் போலீஸ் நிலையத்திற்கு இதையடுத்து போலீசார், மந்திரவாதி மோகன்ராஜ், அவரது மனைவி பாக்கியம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கை ஊட்டி சப்-கோர்ட்டு நீதிபதி ஜோசப் டேவிட் முன்னிலையில் விசாரணைக்கு வந்து. கர்ப்பிணியை கற்பழித்த குற்றத்துக்காக மந்திரவாதி மோகன்ராஜூக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12,500 அபராதமும் விதித்தார்.

உடந்தையாக இருந்த அவரது மனைவி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+