மைண்ட் ட்ரீயுடன் இணையும் அஸ்டெக்
மும்பை: முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான அஸ்டெக் சாப்ட்டின் பங்குகளை வாங்கும் வேலையை முடித்துவிட்டது சர்வதேச அளவில் இயங்கும் சாப்ட்வேர் மறறும் ஆராய்ச்சி நிறுவனமான மைன்ட் ட்ரீ.
தற்போது அஸ்டெக்கின் 79.9 சத பங்குகளை வைத்துள்ள மைன்ட் ட்ரீ விரைவிலேயே, அதனை தனது துணை நிறுவனமாக அறிவிக்கவுள்ளது.
'பங்குகளை வாங்கும் பணி முடிந்துவிட்டது. இப்போது நிறுவனத்தின் பங்குதாரர்களுடைய ஒப்புதலைக் கேட்கும் சம்பிரதாயம் மட்டுமே பாக்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் அந்த வேலையும் முடிந்துவிடும்' என்கி்றார் மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோக் சூட்டா.
இரு நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வேலையின் ஒரு பகுதியாக இன்று நடந்த அஸ்டெக் இயக்குனர்கள் குழுக் கூட்டத்தில் மைன்ட் ட்ரீ முதன்மை நிர்வாக அலுவலர், கிருஷ்ணகுமார் நடராஜன் புதிய சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அஸ்டெக்கின் தற்போதைய தலைமை நிர்வாகி சமிர் போடாஸ், பிதி்ய நிர்வாகத்தின் இயக்குனர்களுள் ஒருவராகப் பொறுப்பேற்கிறார்.
அஸ்டெக்கின் சுயேச்சை இயக்குநர்கள் சுனில் குலாட்டி, எஸ்ஆர் கோபாலன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகத்திலும் சுயேச்சை இயக்குனர்களாகவே நீடிப்பார்கள்.