மதுரை தல்லாகுளத்தில் 'கார்' வெடிகுண்டு புரளி
மதுரை: மூன்று நாட்களாக ஒரே இடத்தில் ஒரு காரில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிளம்பிய புரளியால் மதுரை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தல்லாகுளம் அருகே உள்ளது கமலாநகர். இங்கு யூனியன் கிளப் உள்ளது. இந்த கிளப் அருகே கடந்த மூன்று நாட்களாக ஒரு டாடா சுமோ கார் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த காரில் வெடி குண்டு வைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளம்பியது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
சர்ச்சைக்குரிய அந்த காரை சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் வெடி குண்டுகள் ஏதும் இல்லை என உறுதி செய்தனர்.
பின்னர் காரின் உரிமையாளர் செந்தில்வேலன் என்பவரை தேடிபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காரில் பேட்டரி இல்லை என்பதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செந்தில்வேலன் கூறியுள்ளார். அவரிடம் காருக்கான ஆவணங்களை வாங்கி சரிபார்த்த பின்பு காரை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையடுத்துபொது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications