புலிகள்-அல்கொய்தா தொடர்பு: இலங்கை புகார்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் புகார் கூறியுள்ளது.
கொழும்பில் இன்று சார்க் மாநாடு தொடங்கியது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு ராணுவ செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வாலா பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற மிக கொடுமையான பயங்கரவாத அமைப்பு. புலிகளுக்கும், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய வேட்டையின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்கள் சிக்கினர்.
புலிகளுக்கு எதிராக போராட தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சார்க் நாடுகள் அனைத்துமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தான் என்றார் அவர்.
அவரது பேட்டியின்போது ராணுவ, கடற்படை அதிகாரிகளும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications