ஆடிப் பெருக்கு: உற்சாக கொண்டாட்டம்
திருச்சி: ஆடிப் பெருக்கு பண்டிகை தமிழகத்தின் ஆற்றங்கரையோர நகரங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு பண்டிகையாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆடிப் பெருக்கு பண்டிகை தமிழகத்தின் ஆற்றங்கரை பகுதிகளில் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
குறிப்பாக காவிரி ஆற்றுப் படுகைப் பகுதிகளில் அதீத உற்சாகத்துடன் ஆடிப் பெருக்கு கொண்டாடப்படும். இந்த சமயத்தில், காவிரி ஆறு பொங்கிப் பெருகி வருவது வழக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் இல்லாமல், மனம் நிறைய வருத்தத்துடன் மக்கள் ஆடிப் பெருக்கைக் கொண்டாடிய காலமும் உண்டு. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் ஆடிப் பெருக்கை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு தினமும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காரணம், காவிரியில் தண்ணீர் பொங்கி பெருகி வருவதுதான்.
ஆறுகள் என்றில்லாமல் குளங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றிலும் மக்கள் ஆடிப் பெருக்கைக் கொண்டாடினார்கள்.
திருச்சி நகரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காவிரி ஆற்றங்கரைகளில் திரண்டு சாமி கும்பிட்டு மகிழ்ந்தனர்.
அம்மா மண்டபம் பகுதியில் இன்று மக்கள் கூட்டம் அலை மோதியது.
புதுமணத் தம்பதிகள் குடும்பத்தினருடன் வந்து படையலிட்டு சாமி கும்பிட்டனர்.
அதேபோல மணமாகாத பெண்களும், நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி பனை ஓலையில் செய்யப்பட்ட தோடுகளை வைத்தும், கருகமணி, காப்பரிசி வைத்தும் வணங்கினர்.
பக்தர்கள் கூட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆபத்தான இடங்களில் ஆற்றுக்குள் இறங்கி குளிக்க போலீஸார் தடை விதித்திருந்தனர்.
திருச்சி தவிர கரூர், ஈரோடு, பவானி உள்ளிட்ட காவிரிப் பகுதிகளிலும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் ஆடிப் பெருக்கு கொண்டாடப்பட்டது.
பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் திரண்டு ஆடிப் பெருக்கை கொண்டாடினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications