விரைவில் 10வது மாநகராட்சியாகும் தூத்துக்குடி
வேலூர்: வேலூரின் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சி தொடக்க விழா கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது
வேலூர் உள்ளூர் திட்ட குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதிய பேருந்து நிலையம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வேலூரையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து வேலூருக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வு பணிகள் வரும் 2009ம் ஆண்டு மார்ச்சில் முடிவடையும்.
பணிகள் முடிந்ததும் மேட்டூரில் இருந்து வேலூருக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். வேலூரின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
மாநகராட்சியாகும் தூத்துக்குடி:
தமிழகத்தில் பல நகராட்சிகள் மாநகராட்சியாக திமுக ஆட்சியில்தான் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி விரைவில் தரம் உயர்த்தப்படும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications