சீனா மற்றும் தைவானில் நிலநடுக்கம்
பெய்ஜிங்: சீனாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 231 பேர் காயமடைந்தனர். அதேபோல தைவானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. பிங்க்வு மற்றும் பெய்ச்சுவான் ஆகிய பகுதிகளுக்கு இடையே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
சிச்சுவான் தலைநகர் செங்க்டுவிலும் அதிர்வு உணரப்பட்டது. இதில் 231 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த மே 12ம் தேதி சிச்சுவான் மாகாணம் உள்பட சீனாவில் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 69,000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தைவானிலும்...
தைவான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஹூவாலியன் என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். சேத விபரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications