கோவில் விழாவில் கூட்ட நெரிசல்: 100 பேர் பலி?
பிலாஸ்பூர் (இ.பி): இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இமாசல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது நைனாதேவி கோவில். இந்த கோவிலில் சிரவண உற்சவம் நடக்கிறது. இன்று நடந்த உற்சவத்தில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
இந்த நிலையில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 100 பக்தர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
லாரி ஆற்றில் கவிழ்ந்து 60 பேர் பலி:
இதற்கிடையே, பாட்னா அருகே லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 60 கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ளது மான்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் 125 பேர் அருகில் உள்ள அகுனி கிராமத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு வேலை முடித்துவிட்டு கூலியும், தானிய மூட்டைகளுடன் நேற்று மாலை லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
குண்டும் குழியுமாக இருந்த சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கோர்கி ஆற்றில் தலைக்குப்புற வீழ்ந்தது. இதில் மூட்டை இடுக்குகளில் சிக்கி 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications