Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரத் நகரில் மீண்டும் வெடிகுண்டு சிக்கியது

Subscribe to Oneindia Tamil

23rd Live bomb found in Surat
சூரத்: அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கி வந்த நிலையில், சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் சூரத் நகரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த வாரம் முழுவதும் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 23 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அனைத்துமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடிக்கவில்லை.

இந்தநிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று ஒரு வெடிகுண்டு சிக்கியுள்ளது. அட்வாலைன்ஸ் என்ற இடத்தில் இந்த வெடிகுண்டு சிக்கியது. சௌபாத்தி பஸ் நிலையம் அருகில் உள்ள விளம்பர பலகையின் பின்னால் பச்சை நிற பையில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்ததும் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் விரைந்து வந்து குண்டை மீட்டு அதை செயலிழக்கச் செய்தனர்.

இதையடுத்து இப்பகுதியில் மேலும் வெடிகுண்டுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மோப்ப நாய்கள் சகிதம் குண்டுகளைத் தேடும் பணி நடந்து வருகிறது.

சூரத் நகர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் படியான பொருட்கள் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு போலீஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+