சுர்ஜித் அறிவுரைப்படி அரசை நடத்துவேன் - மன்மோகன் சிங்

சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அப்போது தன்னிடம் பிரதமர் கூறியதாக எச்சூரி கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்துவது தொடர்பாக எனக்கு சுர்ஜித் முன்பு கூறிய அறிவுரை, ஆலோசனையின்படி நடக்க விரும்புகிறேன்.
சுர்ஜித்தின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல நண்பரின் இழப்பு மட்டுமல்லாமல் நாட்டும் ஒரு நல்ல தலைவரை இழந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இதேபோல குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் என்னைத் தொடர்பு கொண்டு சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். நாடு நல்ல தலைவரை, தேச பக்தியுடன் கூடிய மனிதரை இழந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார் என்றார்.
இதற்கிடையே, சுர்ஜித்தின் தீன் மூர்த்தி லேன் வீட்டுக்கு குடியரசுத் துணைத் தலைவர் முகம்மது ஹமீத் அன்சாரி இன்று சென்று அஞ்சலி
செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், சுர்ஜித் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications