கொடநாட்டிலிருந்து நாளை சென்னை திரும்புகிறார் ஜெ.
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையை விட்டு நான்கு மாத காலம் கொட நாடு எஸ்டேட்டில் தங்கியிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை தனது தோழி சசிகலாவுடன் சென்னை திரும்புகிறார்.
ஏப்ரல் 8ம் தேதி கொடநாடு புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா. கோடைகாலத்தையொட்டி ஓய்வுக்காக கொட நாடு சென்றிருந்த ஜெயலலிதா அங்கேயே தங்கியிருந்தார். அவருடன் தோழி சசிசகலாவும் சென்றார்.
அங்கிருந்தபடியே அறிக்ைககள் மூலம் அரசியல் நடத்தி வந்த அவர் எப்போது சென்னை திரும்புவார் என அதிமுகவினர் எதிர்பார்த்து வந்தனர்.
டெல்லியில், பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவியபோது, அனைத்து முக்கிய தலைவர்களும் டெல்லியில் பரபரவென செயல்பட்டுக் கொண்டிருந்தபோது ஜெயலலிதா மட்டும் இதில் பங்கேற்காமல் தனித்து விடப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நான்குமாத கால ஓய்வை முடித்துக் கொண்டு நாளை சசிகலாவுடன் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
கோவைக்கு காரில் வந்து அங்கிருந்து இரவு 9 மணிக்கு பாரமவுண்ட் விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை வருவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications