பஸ் ஸ்டாப்பில் லாரி புகுந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில், பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒரு பெண் படுகாயமடைந்தார்.
குளித்தலையில் உள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் பேருந்துக்காக சிலர் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது பாய்ந்தது.
இதில் பரமேஸ்வரன் (26), பெருமாள் (67) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சின்னமணி என்ற பெண் படுகாயமடைந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications