புதுச்சேரி முதல்வருக்காக அங்கப்பிரதட்சனம் செய்த இளைஞர்!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவியில் நீடிக்க வேண்டும் என வேண்டி புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தரையில் உருண்டு அங்கப்பிரதட்சனம் செய்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜோதி முருகன். எண்ணற்ற சாதனைகளை செய்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் பதவியில் ரங்கசாமி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதிய நிகழ்ச்சி ஒன்றை இன்றுஅவர் செய்தார்.
புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து இந்திரா காந்தி சிலை வரை2 கிலோமீட்டர் நீளம் வரையிலான தொலைவை அவர் உருண்டு அங்கப் பிரதட்சனம் செய்தார்.
மேலும் ரங்கசாமிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications