காபூல் இந்திய தூதரக தாக்குதல்: விசாரணை நடத்த பாக். ஒப்புதல்

கொழும்பு சார்க் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த கிலானி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானில் தேர்தல் நடந்து, கிலானி பிரதமரான பின்னர் இருதலைவர்களும் சந்தித்துப் பேசியது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்திய நிகழ்வுகள் (காபூல் இந்திய தூதரகத் தாக்குதல், பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகள்) குறித்த தனது கவலையை, கருத்தை மிகவும் வெளிப்படையாக பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர அனுமதித்தால் இருநாடுகளின் உறவும் முன்னேற்றப் பாதையில் இருக்க முடியாது என்பதையும் பிரதமர் மன்மோகன் சிங், கிலானியிடம் எடுத்துரைத்தார். இது பேச்சுவார்த்தையையும் பாதிக்கும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜூலை 7ம் தேதி காபூல் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐஎஸ்ஐக்கு தொடர்பு இருப்பது குறித்தும் கிலானியிடம் பிரதமர் விளக்கினார்.
மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவது குறித்தும் கிலானியிடம், மன்மோகன் சிங் புகார் கூறினார்.
காபூல் சம்பவம் தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என கிலானி, பிரதமரிடம் உறுதியளித்துள்ளார் என்றார் மேனன்.












Click it and Unblock the Notifications