ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களைக் காணவில்லை. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 719 படகுகளில் மீன்பிடிக்கச் கடலுக்குள் சென்றனர். இதில் 717 படகுகள் மட்டுமே கடலில் மீன் பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்பியது.
ஆனால், தமிழரசு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் சென்ற கணபதி (45), ராமநாதன் (28), ராஜேந்திரன் (45), செல்வம் (30), சுடலைமாடன் (38) ஆகிய 5 பேரும் திரும்பி வரவில்லை.
அதேபோன்று, பத்மாவதி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற கருப்பசாமி, முருகேசன், பூமிநாதன் ஆகிய 3 பேரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர்களை தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications