சானல் தராத சன் குழுமம் மீது அரசு நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

Suntv Archana
சென்னை: சன் குழுமத்தின் சானல்களை, அரசு கேபிள் டிவி கழகத்திற்கு தராத சன் டிவி குழுமம் மீது அரசு நடவடிக்ைக எடுத்துள்ளதாம்.

தமிழக்தில் ஜூலை 15ம்தேதி அரசு கேபிள் டிவி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களை நிர்மாணித்து தஞ்சையில் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கி அதன் மூலம் வீடுகள் தோறும் கேபிள் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு கேபிள் டிவியில் சன் குழுமத்தின் சானல்கள், ஸ்டார் மற்றும் சோனி டிவியின் சானல்களைப் பெற அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இவை எதுவும் இதுவரை தங்களது சானல்களின் 'அக்ஸஸை' கொடுக்காமல் உள்ளன.

இதையடுத்து இந்த நிறுவனங்கள் மீதுசட்டப்படியான நடவடிக்ைக எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், முறைப்படி மற்ற தொலைக்காட்சி சேனல்களிடம் அனுமதியைப் பெற்றதைப்போல இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்தும் அனுமதியைப் பெற நேரடிப் பேச்சுவார்த்தை மூலமாகவும், எழுத்து வடிவிலான விண்ணப்பம் மூலமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் சன் குழுமம் உள்ளிட்ட இந்த மூன்று நிறுவனங்கள் டிராய் விதிக்கு நேர்மாறாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு தமது சேனல்களை வழங்க மறுத்து வருகின்றன.

எனவே அந்த மூன்று நிறுவனங்களின் சேனல்களைப் பெறுவதற்கு மத்திய அரசின் சட்டப்படி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது என்பதை பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+