வங்கக் கடலில் புயல் சின்னம்-கனமழை பெய்யும்

Subscribe to Oneindia Tamil

low pressure
சென்னை: வங்கக் கடலில் குறைந்த அழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலின் வடமேற்குப்பகுதியில் மையம் கொண்டுள்ள உள்ள இந்த குறைந்த காற்றழுத்தம், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரத் துவங்கியுள்ளது.

நேற்று மாலை சென்னை உள்பட தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் மட்டும் 7 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இன்றும் சென்னை நகரில் பெரும்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 60 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்குள் போக வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அபாய அறிவிப்புக் கொடியும் கடலோர மாவட்டங்களில் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை துவங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+