ரங்கசாமி பிறந்தநாள்-வாழ்த்த வராத அமைச்சர்கள்
புதுச்சேரி: பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று தனது 59வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு இன்று 59வது பிறந்த நாளாகும். அதிருப்தி கோஷ்டிகளின் தொடர் பிரச்சினைகள், நெருக்கடிக்கு மத்தியில், இன்று தனது வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடினார் ரங்கசாமி.
ரங்கசாமியின்ஆதரவாளர்கள் நகர் முழுவதும் கட் அவுட்கள், பேனர்கள், வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜார், திமுக மாநில அமைபப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், பாமக எம்.பி. ராமதாஸ் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இருப்பினும் ரங்கசாமி அமைச்சரவையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் கூட அவரை வாழ்த்த வரவில்லை. மாறாக தங்களது தனிச் செயலாளர்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
சபாநாயகர் ராதாகிருஷ்ணனும் முதல்வரை வாழ்த்த வரவில்லை. அவர் பிரேசில் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications