தமிழகத்தை பிரிக்க டாக்டர் சேதுராமன் கோரிக்கை
மதுரை: தமிழகம் முன்னேறப்பாதையில் செல்ல தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மூமுக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
மூமுக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தென்மாநில இயக்கம் என்ற ஒரு அமைப்பை துவக்கியுள்ளார். இந்த அமைப்பின் செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது: வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கூறியவர்கள் இன்று ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் தென் மாவட்டங்கள்தான் தேய்கிறது.
பெரும்பாலும் எந்த தொழிற்சாலைகளும் வட மாவட்டங்களில்தான் தொடங்கப்படுகிறது. தென் மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளை குறைத்துவிட்டனர். தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை இரண்டாக பிரிப்பதுதான் எங்களது கோரிக்கை. காவிரியை நடுவில் வைத்து தமிழகத்தை இரண்டாக பிரிக்கலாம். தெற்கு பகுதி 20 எம்பி தொகுதியும், 134 சட்ட சபை தொகுதிகளையும் கொண்டுள்ளது.
எனவே திருச்சிக்கு தெற்கே புதிய மாநிலம் உருவாக்க வேண்டும். அதற்கு தலைநகரமாக மதுரை செயல்பட வேண்டும். அதுவும் இந்திய அரசுக்கு உட்பட்தாக இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் எப்படி சிறப்பாக செழித்து இருந்ததோ அதே போன்று மீண்டும் மாறும் என்றார்.
சேதுராமன் பேசிய முழு வீடியோ டேப்பை ரகசிய போலீசார் தேடி வருகின்றனர். அந்த பேச்சு டேப் கிடைத்தால் அதில் அரசுக்கு எதிராகவோ, அல்லது பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவோ அவர் பேசியிருந்தால் அவர் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications