சீனாவில் தீவரவாத தாக்குதல்-16 போலீஸார் பலி
பெய்ஜிங்: சீனாவி்ல் போலீஸ் நிலையத்துக்குள் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 4 நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வட மேற்கு ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கஷ்கர் நகர போலீஸ் நிலையத்தில் காலை பயிற்சிக்காக போலீசார் கூடியிருந்தனர். அப்போது லாரியில் வந்த அதை இருவர் போலீஸ் நிலையத்துக்குள் வேகமாக செலுத்தினர். திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் சில போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.
இந்த திடீர் தாக்குதலில் 14 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 போலீஸாரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் இறந்தனர்.
தகவலறிந்த போலீசார் அந்தக் கும்பலை விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில் ஜிங்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் தெரியவந்துள்ளது.
ஜிங்ஜியாங் மாகாணத்தில் கிழக்கு துர்மேனி்ஸ்தான் இஸ்லாமிக் இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், நடந்தது தீவிரவாத தாக்குதல் என சீன போலீசார் கூறியுள்ளனர்.
வரும் 8ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications