கோவில் கதவுகளில் அலாரம்-அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிக வருவாய் உள்ள கோவில் கதவுகளில் எச்சரிக்கை அலாரம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை மண்டல இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் நடந்தது.

இதில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களின் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், மண்டல இணை கமிஷனர் சுதர்சன் பேசுகையில்,

கோவில்கள் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும். இது தொடர்பாக காவல்துறையினருடன் கோவில் நிர்வாக அதிகாரிகள் பேச வேண்டும்.

கோவில்களில் சிலைகள், நகைகள் வைத்திருக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதுவரை அந்த இடங்களில் கதவுகளில் அலாரம் பொருத்தவில்லை என்றால், உடனடியாக பொருத்த வேண்டும்.

வருவாய் உள்ள கோவில் கதவுகள் அனைத்திலும் எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+