டாடாவின் மிகப் பெரிய வளையல்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: உலகிலேயே மிகப் பெரிய வளையலை உருவாக்கியுள்ளதாக டைட்டன் தொழில் குழுமத்தின் நகை விற்பனைப் பிரிவான கோல்ட் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 காரட்டினாலான இந்த மிகப் பெரிய தங்க வளையலை ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கோல்ட் பிளஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் எல்.ஆர். நடராஜன் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே மிகப் பெரிய வளையல் இதுதான். இதன் சுற்றளவு 1830 மில்லி மீட்டராகும். அகலம் 140 மில்லி மீட்டராகும். எடை 24 ஆயிரத்து 505 கிராம் ஆகும்.

நான்கு 22 காரட் வளையங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வளையங்களும், டாடா நிறுவனத்தின் கொள்கைகளான நம்பிக்கை - நாணயம், வாடிக்கையாளர் திருப்தி, மதிப்பு மற்றும் புதுமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த தங்க வளையல் சுத்தமான 22 காரட்டினால் ஆனது. இந்த வளையலை உருவாக்க 227 மனித நாட்கள் தேவைப்பட்டன. மொத்தம் 30 பேர் சேர்ந்து இதை உருவாக்கினர்.

கோல்ட் பிளஸ் நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும் இந்த வளையல் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது என்றார் அவர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+