டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அனுமதி கோரி 100 வழக்குகள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1க்கான மெயின் தேர்வு நடக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இந்த நிலையில் தேர்வில் தங்களை அனுமதிக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 31ம் தேதி 31 பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.
31 பேரும் தங்களது மனுவில், நாங்கள் 2007ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நடந்த தொடக்க நிலைத்தேர்வை எழுதி பாஸ் செய்துள்ளோம். ஆனால் எங்களுக்கு வந்த மதிப்பெண்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது.
இதற்குக் காரணம் தேர்வில் பல தவறான கேள்விகள் இடம் பெற்றிருந்ததே. மேலும் பதில்களும் கூட தவறானவையாக இருந்தன. எனவேதான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் போய் விட்டது. எனவே எங்களை மெயின் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த 31 பேரையும் மெயின் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என் டி.என்.பி.எஸ்.சிக்கு உத்தரவிட்டது.
மேலும், அனைத்து தவறான கேள்விளையும்,அதற்கான பதில்களையும் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டி.என்.பி.எஸ்.சி நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதே கோரிக்கையுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதுகுறித்து மனுதாரர் ஒருவர் கூறுகையில், 7 ஆண்டுகள் கழித்து இந்த தேர்வு நடைபெறுகிறது. எங்களில் பலருக்கு அடுத்த தேர்வை எழுத போதிய வயது இருக்காது. எனவேதான் எங்களையும் ேதர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications