கொடநாடு எஸ்டேட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கடந்த நான்கு மாதங்களாக கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று இரவு சென்னை திரும்பினார். அவருடன் தோழி சசிகலாவும் திரும்பினார்.

ஏப்ரல் 8ம் தேதி கொடநாடு எஸ்டேட் திரும்பினார் ஜெயலலிதா. அதன் பிறகு அங்கிருந்தபடியே அரசியல் நடத்தி வந்தார். தினசரி அறிக்கைகள் விடுவதும், போராட்டங்களை அறிவிப்பதுமாக இருந்தார்.

ஜெயலலிதா இவ்வாறு கொடநாட்டிலிருந்தபடியே அரசியல் செய்வது குறித்து திமுக விமர்சித்திருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அரசியலில் எந்தத் தவறும் இல்லை என்று விஜயகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா எப்போது திரும்புவார் என அதிமுகவினர் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்தப் பின்னணியில் நேற்று இரவு ஒன்பதே கால் மணியளவில் சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா. அவருடன் சசிகலாவும் உடன் வந்தார்.

விமான நிலையத்தில் பெருமளவில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களை நோக்கி கையசைத்த ஜெயலலிதா பின்னர் கார் மூலம் வீடு திரும்பினார்.

ஜெயலலிதா இல்லாததால் கடந்த 4 மாதங்களாக அதிமுகவினரை கட்சியின் தலைமை கழகத்திலும் காண முடியவில்லை.

இந் நிலையில் ஜெயலலிதா ஊர் திரும்பிவிட்டதால் இன்று பல மாநில நிர்வாகிகள் தலைமை கழகத்துக்கு படையெடுத்தனர். வெளியூர்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் சென்னை வந்திருந்தனர். இன்று மாலை அல்லது நாளைக்குள் தலைமை கழக நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+