பூரண மது விலக்கு: மதுரை ஆதீனம் கோரிக்கை
திருச்சி: தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் திருச்சி வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், அவற்றின் பயன்பாடுகளாலும் இயற்கை சமன்பாடு வெகுவாக பாதித்து வருகிறது. இதனால்தான் பூமி வெப்பமடைந்து வருகிறது. பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த பேராபத்தில் இருந்து நாம் உலகத்தை காப்பாற்ற வேண்டும். அதற்காக இறைவனை அனைவரும் வணங்க வேண்டும்.
மக்கள் சைவ உணவு பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும். புலால் உணவை மெய் ஞானமும், விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த தமிழக முதல்வர் கருணாநிதி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.