நாங்குனேரி: தாசில்தாரை கொல்ல முயற்சி!
நெல்லை: நாங்குநேரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தாசில்தாரை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயன்றது ஒரு கும்பல். இதனால் பயன்து போய் பின்வாங்கியதால், உயிர் தப்பினார் தாசில்தார்.
வள்ளியூர் மெயின் ரோட்டில் நாங்குநேரி தாசில்தார் செல்வராஜ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டர் வந்தது. டிராக்டரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர்கள் அரிவாள் மற்றும் மண்வெட்டியால் தாக்க முயன்றனர். இதை எதிர்பாராத தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பின்வாங்கினர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட டிராக்டரில் இருந்த 5 பேரும் டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வள்ளியூர் தலையாரி மகாலிங்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.
மணல் கடத்தலை தடுத்த நாங்குநேரி தாசில்தாரை கும்பல் கொல்ல முயன்ற சம்பவம் வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications