நெல்லை நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் 3 பேரும் ஆஜர்
நெல்லை: போலீஸ் காவல் முடிந்த நிலையில், தீவிரவாதிகள் அப்துல் கபூர், ஹீரா, அலி அப்துல்லா ஆகியோரை போலீசார் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் சுதந்திர தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் அப்துல் கபூர், ஹீரா, பூழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலி அப்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை நீதிமன்றத்தின் அனுமதியுடன் இவர்கள் 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்தனர். கடந்த 1ம் தேதி முதல் பாளை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மேலும் தீவிரவாதிகள் ஹீரா, சேக் அப்துல் கபூர் ஆகியோர் தங்கியிருந்த வீடுகளில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டைரி, வரைபடங்கள் சிக்கின. டைரியில் தலைமறைவு தீவிரவாதிகள் முகவரிகள், மற்றும் செல்போன் நம்பர்கள், குண்டு வைக்க தேர்வு செயயப்பட்ட இடங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், மார்க்கெட் மற்றும் முக்கிய அரசு அலுவலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் ஹீரா, கபூர், அப்துல்லா ஆகியோரிடம் நேற்றுடன் விசாரணை முடிந்தது. இதையடுத்து நேற்று மாலை 4.55 மணிக்கு அவர்களை நெல்லை குற்றவியல் 4ம் எண் நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் மூன்று பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். தீவிரவாதிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள், அவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், டைரிகள், வரைபடங்களையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications