திருமா-'களப்பணியில் கால் நூற்றாண்டு விழா'
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 25 ஆண்டு அரசியல் வாழ்க்கையை பூர்த்தி செய்வதையொட்டி சென்னை தீவுத்திடலில் அந்தக் கட்சியின் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'களப்பணியில் கால் நூற்றாண்டு விழா' என்ற பெயரிலான இந்த விழா, திருமாவளவனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ம் தேதி நடக்கிறது.
அன்று திருமாவளவன் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெறுகிறார்.
இதுகுறித்து தலைமை நிலைய செயலாளர் வன்னிஅரசு கூறுகையில், திருமாவளவனுக்கு சால்வை, மாலைகள் அணிவிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக தேர்தல் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
காலையில் தொடங்கும் நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications