துபாய்-8வது மாடியிலிருந்து விழுந்து இந்தியர் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயின் ரஸ் அல் கைமா பகுதியில், 8வது மாடியிலிருந்து விழுந்து இந்தியத் தொழிலாளர் பலியானார்.
ரஸ் அல் கைமா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அப்போது 8வது மாடியில் சம்பந்தப்பட்ட இந்தியத் தொழிலாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கிரேனிலிருந்து கான்க்ரீட் பிளாக்குகள் தவறி அவர் மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய அந்த இந்தியர் கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை சக்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. இறந்த இந்தியத் தொழிலாளருக்கு வயது 27.
இறந்த தொழிலாளர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications