காங்கிரஸை திமுக நம்பக் கூடாது-நல்லக்கண்ணு
திருச்சி: காங்கிரஸை நம்பி கருணாநிதி எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்தியில் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு காரணமே, குறைந்தபட்ச வேலை திட்டம், மதவாதத்தை ஒழிப்பது, விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, ஊழலை ஒழிப்பது ஆகிய காரணங்களை முன் வைத்துத் தான். ஆனால் இவற்றை எல்லாம் காங்கிரஸ் காற்றில் பறக்க விட்டுவிட்டது.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. காய்கறி வாங்கும்போது கொசுறு என்று கொடுக்கப்பட்ட கொத்த மல்லி இன்று ரூ.1.20க்கு விற்கப்படுகிறது. இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வே காரணம்.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. ஆனால் இங்கு பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்கவில்லை. அமெரிக்கா புகுந்த நாடு உறுப்படாது. அப்படிப்பட்ட அமெரிக்காவிடம் இந்தியாவை அடமானம் வைக்க சிலர் துடிக்கின்றனர்.
நடக்கும் உண்மையைத்தான் கம்யூனிஸ்ட்கள் பேசுவோம். இப்படிப்பட்ட காங்கிரஸை நம்பி திமுக தலைவர் கருணாநிதி எந்த முடிவும் எடுக்க கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications