ரூ1,808 கோடியில் சென்னை விமான நிலைய விரிவாக்கம்
டெல்லி: ரூ. 1808 கோடி மதிப்பிலான சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2010ம் ஆண்டில் விரிவாக்கப் பணிகள் முடிவடையும்.
விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னர் சென்னை விமான நிலைய பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கை ஆண்டுக்கு 1.4 கோடியாக உயரும்.
சர்வதேச தரத்துடன் விரிவுபடுத்தப்படவுள்ள சென்னை விமான நிலையத்தில், மிகப் பெரிய விமானங்கள் வந்து இறங்குவதற்கேற்ற வகையில் செகன்டரி ரன்வே விரிவாக்கப்படும். இதுதவிர கூடுதல் பார்க்கிங் வசதி, டேக்ஸிவே உள்ளிட்டவை உருவாக்கப்படும்.
தற்போதுள்ள செகன்டரி ரன்வே 832 மீட்டர் அதிகரிக்கப்பட்டு, 2917 மீட்டர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்படும். இதற்காக மாநில அரசு அடையார் ஆற்றின் குறுக்கே 130 ஏக்கர் நிலத்ைதக் கொடுத்துள்ளது.
செகன்டரி ரன்வே விரிவாக்கம் மற்றும் அடையாற்றின் மீது பாலம் அமைப்பதற்காக ரூ. 310 கோடி ஒதுக்கப்படவுள்ளது.
டேக்ஸிவே ரூ. 150 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். மற்ற பணிகளுக்கு ரூ 75 கோடி ஒதுக்கப்படவுள்ளது. இதுதவிர விமான நிலையம் தொடர்பான பிற பணிகளுக்கு ரூ. 535 செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு ஒரு மணிநேரத்திற்கு 50 விமானங்கள் வந்து, ெசல்லும் வாய்ப்பு ஏற்படும். தற்போது ஒரு மணி நேரத்திற்கு 25 விமானங்கள் மட்டுமே கையாளப்படுகிறது.
காமராஜர் உள்நாட்டு முனையத்தில் தற்போது ஆண்டுக்கு 1 கோடி பயணிகள் போக்குவரத்து நடைபெறுகிறது. இதை 1.6 கோடியாக உயர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சர்வதேச முனையத்திலும் அதே அளவிலான பயணிகள் தற்போது கையாளப்படுகிறார்கள். அது 1.4 கோடியாக உயரும்.
உள்நாட்டு முனையம், சர்வதேச முனைய விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 1077.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய கார் பார்க்கிங் சர்வதேச தரத்தில் அடுக்குமாடிக் கார் பார்க்கிங்காக மாற்றப்படவுள்ளது. இதற்கு மட்டும் ரூ. 195.84 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையகம் இந்த விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
திட்டச் செலவில் 80 சதவீதத்ைத (ரூ. 1446.4 கோடி) இந்திய விமான நிலைய ஆணையகமும், மீதமுள்ள 20 சதவீதத்தை (ரூ. 361.6 கோடி) கடன்கள் மூலமும் திரட்டப்படும்.
கடந்த மாதம் இந்தத்திட்டத்திற்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இறுதி ஒப்புதலை அளித்தது. நேற்று மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கியது. இந்தத் தகவலை நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விரிவாக்கப் பணிகளுக்குப் பின்னர் டெல்லி, மும்பை விமான நிலையங்களின் வரிசையில் சென்னையும் இணையும்.
-
6 மணிக்கு மேல் நோ! தேர்தல் அறிவிப்புக்கு பின் இரவில் பிரசாரம் செய்வதை தவிர்க்கும் விஜய் -
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?











Click it and Unblock the Notifications