ரூ1,808 கோடியில் சென்னை விமான நிலைய விரிவாக்கம்
டெல்லி: ரூ. 1808 கோடி மதிப்பிலான சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2010ம் ஆண்டில் விரிவாக்கப் பணிகள் முடிவடையும்.
விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னர் சென்னை விமான நிலைய பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கை ஆண்டுக்கு 1.4 கோடியாக உயரும்.
சர்வதேச தரத்துடன் விரிவுபடுத்தப்படவுள்ள சென்னை விமான நிலையத்தில், மிகப் பெரிய விமானங்கள் வந்து இறங்குவதற்கேற்ற வகையில் செகன்டரி ரன்வே விரிவாக்கப்படும். இதுதவிர கூடுதல் பார்க்கிங் வசதி, டேக்ஸிவே உள்ளிட்டவை உருவாக்கப்படும்.
தற்போதுள்ள செகன்டரி ரன்வே 832 மீட்டர் அதிகரிக்கப்பட்டு, 2917 மீட்டர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்படும். இதற்காக மாநில அரசு அடையார் ஆற்றின் குறுக்கே 130 ஏக்கர் நிலத்ைதக் கொடுத்துள்ளது.
செகன்டரி ரன்வே விரிவாக்கம் மற்றும் அடையாற்றின் மீது பாலம் அமைப்பதற்காக ரூ. 310 கோடி ஒதுக்கப்படவுள்ளது.
டேக்ஸிவே ரூ. 150 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். மற்ற பணிகளுக்கு ரூ 75 கோடி ஒதுக்கப்படவுள்ளது. இதுதவிர விமான நிலையம் தொடர்பான பிற பணிகளுக்கு ரூ. 535 செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு ஒரு மணிநேரத்திற்கு 50 விமானங்கள் வந்து, ெசல்லும் வாய்ப்பு ஏற்படும். தற்போது ஒரு மணி நேரத்திற்கு 25 விமானங்கள் மட்டுமே கையாளப்படுகிறது.
காமராஜர் உள்நாட்டு முனையத்தில் தற்போது ஆண்டுக்கு 1 கோடி பயணிகள் போக்குவரத்து நடைபெறுகிறது. இதை 1.6 கோடியாக உயர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சர்வதேச முனையத்திலும் அதே அளவிலான பயணிகள் தற்போது கையாளப்படுகிறார்கள். அது 1.4 கோடியாக உயரும்.
உள்நாட்டு முனையம், சர்வதேச முனைய விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 1077.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய கார் பார்க்கிங் சர்வதேச தரத்தில் அடுக்குமாடிக் கார் பார்க்கிங்காக மாற்றப்படவுள்ளது. இதற்கு மட்டும் ரூ. 195.84 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையகம் இந்த விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
திட்டச் செலவில் 80 சதவீதத்ைத (ரூ. 1446.4 கோடி) இந்திய விமான நிலைய ஆணையகமும், மீதமுள்ள 20 சதவீதத்தை (ரூ. 361.6 கோடி) கடன்கள் மூலமும் திரட்டப்படும்.
கடந்த மாதம் இந்தத்திட்டத்திற்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இறுதி ஒப்புதலை அளித்தது. நேற்று மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கியது. இந்தத் தகவலை நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விரிவாக்கப் பணிகளுக்குப் பின்னர் டெல்லி, மும்பை விமான நிலையங்களின் வரிசையில் சென்னையும் இணையும்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications