மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமர் வேட்பாளர்-சோனியா
{image-Sonia Gandhi250_16082008.jpg tamil.oneindia.com}டெல்லி: அடுத்த தேர்தலிலும் மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சேவாதளம் சார்பில் சுதந்திர தினி விழா கொண்டாட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொடியேற்றும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் மன்மோகன் சிங்கிடம், அடுத்த ஆண்டும் நீங்களே செங்கோட்டையில் கொடியேற்றுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அடுத்த ஆண்டும் ஏற்றுவேன் என்று நம்புகிறேன் என்றார். அப்போது குறுக்கிட்ட சோனியா காந்தி, அதில் என்ன சந்தேகம். அடுத்த ஆண்டும் மன்மோகன் சிங்தான் செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று தெரிவித்தார்.
சோனியாவின் பேச்சு, அடுத்த தேர்தலிலும் மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்பதை சூசகமாக உணர்த்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications