கும்பகோணம்-கோவை ஜனசதாப்தி ரயில் துவக்கம்
மயிலாடுதுறை: ரயில்வேயின் சில திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள் 50 சதவீத நிதியை ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில் கும்பகோணம் -கோவை செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதி்ல் கலந்து கொண்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு பேசியதாவது:
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை மயிலாடுதுறை வரை நீடிக்க செய்யும் கோரிக்கை பரிசீலிக்கப்படும். மயிலாடுதுறை-விழுப்புரம் அகல ரயில் பாதை பணியில் நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் பாலம் கட்டும் வேலை மட்டும் நிறைவு பெற்றாமல் உள்ளது. அந்தப் பணி டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவி்டும்.
இதனால் ஏற்படும் சிரமத்தை தடுக்க சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு வரும் அக்டோபர் முதல் ரயில் இயக்கப்படும். மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி வரை பாசஞ்சர் ரயில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தரங்கை வரை ரயில் பாதை ஏற்படுத்தி அதை நாகூர் வரை நீடித்தால் அதன் மூலம் திருக்கடையூர், திருநள்ளாறு, நாகூர், வேளாங்கன்னி என அனைத்து மத கோவில்களுக்கும் வட மாநில மக்கள் செல்ல வசதியாக இருக்கும். அந்த ரயிலுக்கு மதசார்பின்மை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறினார்.
இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள் 50 சதவீத நிதியை ஏற்றுக் கொண்டால் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications