பெரும்பான்மையை நிரூபிக்க கோடாவுக்கு கெடு!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் மது கோடா தனது அரசின் பெரும்பான்மையை ஆகஸ்ட் 25ம் தேதி நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை கேட்டு 'அனத்தி' வந்த சிபு சோரன், கோடா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து கோடா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் 25ம் தேதி கோடா அரசு பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சையத் சிப்தே உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 25ம் தேதி சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக கோடா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகள் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளன. எனவே எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்கள் ஆதரவோடும், எம்.எல்.ஏக்கள் ஆதரவோடும் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications