கல்லூரி மாணவி மர்ம சாவு: சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
திருச்சி: திருச்சி இந்திராகாந்தி கல்லூரி மாணவி பிரசன்யா, விடுதியில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள இந்திராகாந்தி கல்லூரி விடுதியில் கடந்த 8ம் தேதி மாணவி பிரசன்யா என்பவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சேர்ந்து, மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், முதல்வருக்கு கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் மாணவி பிரசன்யாவின் மரணம் குறித்த வழக்கை விசாரிக்கும்படி சிபிசிஐடிக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications