உட்கட்சி தேர்தல்: அழகிரி- ஸ்டாலின் ஆதரவாளர்கள் மோதல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக உட்கட்சி தேர்தலில் மு.க. அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடும் மோதலுக்கிடையே கீரனூர் பேரூராட்சி செயலாளராக ஸ்டாலின் ஆதரவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கிராமப் பகுதிகளுக்கான கிளைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயலாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதி தேர்தல் நடைபெறுவதாக திமுக தலைமை அறிவித்தது. அரிமழம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கீரனூர் பேரூராட்சியில் அமைச்சர் ஸ்டாலின் ஆதரவாளராக அரசு வக்கீல் செல்லப் பாண்டியனும், மு.க. அழகிரி ஆதரவாளராக வேளாண்மை விற்பனை குழு தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான அன்பு செல்வன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த இரு கோஷ்டிகளும் தங்களது ஆதரவாளர்களை எதிர்தரப்பு கடத்திவிட்டதாக ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் செல்லப்பாண்டியன், அன்பு செல்வன் ஆகியோரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கீரனூர் பகுதி பேரூராட்சி தேர்தல், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறுவதாக திமுக தலைமை அறிவித்தது. தேர்தல் தொடங்குதற்கு முன்பே ஸ்டாலின்-அழகிரி ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனால் மாவட்ட திமுக அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய 80 பேரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 85 பேரில் 5 பேர் வாக்களிக்க வரவில்லை. அப்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி புகார் கூறி தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார் அன்புச்செல்வன். இதனால் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு பதிவு மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் ஸ்டாலின் ஆதரவாளர் அஸ்ரப் அலி 57 வாக்குகள் பெற்று பேரூராட்சி செயலாளராக வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications