'மக்கள் மன ஓசை அறியா கருணாநிதி'- சமக
புதுக்கோட்டை: 'உளியின் ஓசை'யை அறிந்த முதல்வர் கருணாநிதி மக்கள் மனதின் ஓசையை அறிந்து கொள்ள தவறிவிட்டார் என்று சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, உரத் தட்டுப்பாடு, மின் வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகின்றர். இதனால் திமுக அரசு மீது மக்கல் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை உணர்ந்தே தேர்தலுக்கு முன்பே கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
உளியின் ஓசை அறிந்த கருணாநிதி, மக்கள் மனதின் ஓசையை அறிந்து கொள்ள தவறிவிட்டார். செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் அ.இ.ச.ம.க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குறித்த தேதிகள் அறிவிக்கப்படும்.
மக்கள் தரிசனம் என்ற நிகழ்ச்சியை தலைவர் சரத்குமார் செப்டம்பரில் தொடங்குகிறார். ஜனவரி வரை இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications