திருச்சி சென்ற 4 வாலிபர்கள் மாயம்-கடத்தலா?
சென்னை: காணாமல் போன சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள், கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி (19), அவரது நண்பர்கள் ஷாஜகான் (20), முகமது ரபீக் (20), செல்லக்கனி (21). கடந்த 20ம் தேதி திருச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நால்வரும் சென்றனர். ஆனால் இதுவரை அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்களின் குடும்பத்தினர் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஜாபர் அலி தனது தந்தை சவுகத் அலிக்கு போன் செய்துள்ளார். தன்னையும் தனது நண்பர்களையும் ஒரு கும்பல் கடத்தியுள்ளதாகவும், பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும் ஜாபர் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சவுகத் அலி மகனையும் மற்ற வாலிபர்களையும் மீட்டு தரும்படி போலீஸில் நேற்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் வாலிபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications