பாகிஸ்தான்: பேரணியில் குண்டுவெடிப்பு-3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாயினர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலுசிஸ்தான் மாகாணம். இங்குள்ள ஜபாராபாத் மாவட்டத்தில் சுயாட்சி ஜம்ஹூரி வாட்டன் கட்சி சார்பில் இன்று பேரணி நடந்தது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. அந்த பகுதியில் உடல்கள் சிதறி ரத்த சகதியாய் காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டர் பைக்கில் குண்டு வைக்கப்பட்டு, அதை ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+