இந்தப் புகழ் தற்காலிகமானது: அபினவ் பிந்த்ரா

Subscribe to Oneindia Tamil

Abinav Bindra
டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றதால் தனக்கு கிடைத்துள்ள புகழ் தற்காலிகமானது என்றும், அனைவரும் இதை சீக்கிரம் மறந்து விடுவார்கள் என்றும் துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா கூறியுள்ளார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தனி நபர் தங்கத்தை பெற்றுத் தந்தார்.

அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை வென்றதற்காக டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பின்னர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

ஒலிம்பிக்கில் தங்கம் பெற்றதால் எனக்கு கிடைத்துள்ள புகழ் கொஞ்ச காலமே இருக்கும். 20 நாட்கள் சென்றால் எல்லோரும் இதை மறந்து விடுவார்கள். எதிர்காலம் பற்றி எந்த உறுதியான திட்டமும் என்னிடம் இல்லை. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்க செய்வதே என்னுடைய நோக்கம்.

வெண்கல பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. 3 பதக்கங்களின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+