ஓபாமா முறைப்படி வேட்பாளராக அறிவிப்பு
டென்வர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஓபாமா, முறைப்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய நடந்த மாகாண வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா முன்னிலை பெற்று வேட்பாளரானார். அவருடன் கடைசி வரை மோதிப் பார்த்த ஹில்லாரி கிளிண்டன், இனியும்தனக்கு வெற்றி வாய்ப்பில்லை என்ற நிலை வந்ததைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் டென்வர் நகரில் ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடந்தது. அதில்முறைப்படி ஓபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பான தீர்மானத்தை ஹில்லாரி கிளிண்டன் கொண்டு வந்தார். அதை ஜனநாயகக் கட்சியின் மாநாடு குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து ஆயிரக்கணக்கான கட்சிப் பிரதிநிதிகள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
இதன் மூலம் ஜனநாயகக் கட்சி புதிய வரலாறு படைத்துள்ளது. கருப்பர் இனத்தைச் ேசர்ந்த ஒருவரை அதிபர் தேர்தலில் நிறுத்துவது இதுவே முதல் முறை. ஓபாமா வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.
கென்யாவைச் ேசர்ந்த தந்தைக்கும், அமெரிக்காவைச் ேசர்ந்த தாய்க்கும் பிறந்தவர் ஓபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கருப்பர் இனத்தவர்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமை கூட கிடையாது. தற்போது அதிபர் பதவிக்கு வெகு அருகே கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஓபாமா வந்திருப்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நவம்பர் 4ம் ேததி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெய்ன் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு ஜோசப் பிடன் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications