என்.எஸ்.ஜி: நிபந்தனையை ஏற்க மாட்டோம்-எம்.கே.நாராயணன்
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணு ஆயுத சோதனை, இந்தியாவின் அணு உலைகளை ஆய்வு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக நிபந்தனை விதிப்பதை இந்தியா ஏற்காது. அப்படிப்பட்ட நிபந்தனைகளை இந்தியாவால் ஏற்க முடியாது.
இதைத் தவிர்த்து பிற விஷயங்கள் குறித்து பேச முன்வந்தால் அதை இந்தியா ஏற்கும்.
இந்தியாவின் அணுக் கொள்கை வெளிப்படையானது. இந்திய மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சில உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளார். அதை இந்திய அரசால் மீற முடியாது.
நமது பாராளுமன்றத்திற்கும் பிரதமர் சில உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளார். அவற்றை மீற முடியாது. இப்படிப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் அவற்றை இந்தியா ஏற்காது என பிரதமர் நாட்டுக்கு உறுதியளித்துள்ளார். அதை நாம் எப்படி மீற முடியும்.
இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால் உடனடியாக ஒத்துழைப்பை நிறுத்தி விடுவோம் என சில என்.எஸ்.ஜி. நாடுகள் கூறியுள்ளன. இதை ஏற்க முடியாது.
என்.எஸ்.ஜி.யிடம் நாம் எதை ஏற்பதாக இருந்தாலும், அவற்றை நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்த முடியும் என்றால் மட்டுமே ஏற்போம் என்றார் நாராயணன்.