கேரளா: தமிழக சுற்றுலா பயணிகளே அதிகம்
திருவனந்தபுரம்: பிற மாநிலங்களை காட்டிலும் தமிழக சுற்றுலா பயணிகளே கேரளாவிற்கு அதிகம் வருவதாக கேரளா சுற்றுலா துறை இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்
அவர் கூறியதாவது:
கேரள மாநிலத்தின் இயற்கை சூழ்நிலையை ரசிக்க, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர்.
இதனால், கேரள சுற்றுலாத் தலங்கள் குறித்து, தமிழகத்தில் விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தாண்டு, இதுவரை 18 லட்சம் பேர் வந்துள்ளனர். இது, கடந்தாண்டை விட 15 சதவீதம் அதிகம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும், இந்தாண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாத கணக்கின்படி, 2.34 லட்சம் வெளிநாட்டினர் இங்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளனர்.
கடந்தாண்டு, சுற்றுலா துறை மூலம், ரூ.11,443 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இங்கு பந்த் மற்றும் போராட்டங்கள்தான் சுற்றுலா பயணிகளுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதானால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications