Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'அழகிரி': சிபிஎம்மிடம் மதுரை கேபிள் ஆபரேட்டர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

Alagiri
சென்னை: மதுரையில் மு.க.அழகிரியின் ஆர்.சி.வி. குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாலர் வரதராஜனை சந்தித்து மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புகார் கூறியுள்ளனர்.

மதுரையில் அழகிரி தொடங்கிய ஆர்.சி.வி. யால் தங்களுக்கு பெரும் இடையூறும், மிரட்டலும் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில் நடத்த முடியவில்லை. பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சமீபத்தில் புகார் கூறியிருந்தனர்.

தங்களுக்கு ஆதரவு கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கப் போவதாகவும் அவர்கள் ெதரிவித்திருந்தனர்.

அதன்படி வரதராஜனை மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று சந்தித்து புகார் தெரிவித்தனர். தங்களுக்கு அனைத்து கேபிள் டிவிகளின் சிக்னலும் வழங்கப்பட வேண்டும். தொழில் பாதுகாப்பு, உயிருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், மதுரையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஓர வஞ்சனையில்லாமல் அனைத்து டிவிகளும் தெரியும் படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+