ஒரு கண்ணை தோண்டியவர் மருத்துவமனையில் இன்னொரு கண்ணையும் தோண்டினார்

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் அடகா கிராமத்தைச் சேர்ந்தவர் முதுகப்பா எல்லப்பா கரடி (55). இந்த கிராமத்தில் சங்கராஜா சுவாமிகள் மடம் உள்ளது. தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட முதுகப்பா, கடந்த 28ம் தேதி நள்ளிரவு மடத்துக்கு சென்றார்.
தனது கனவில் சங்கராஜா சுவாமிகள் தோன்றி, கண் கேட்டதாக கூறி, தனது வலது கண்ணை கட்டை விரலால் தோண்டி எடுத்து வைத்து சாமி கும்பிட்டார். கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. வலி தாங்காமல் அழுதார்.
ஒரு கண்ணில் ரத்தமும், மறு கண்ணில் கண்ணீருமாய் துடித்த முதுகப்பாவை பாதாமி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்துவிட்டார் முதுகப்பா. இன்று அதிகாலை 3 மணியளவில் தனது இடது கண்ணையும் தோண்டி எடுத்தார். கண்ணிருந்து இடத்தில் ரத்தம் வழிய, கையில் தோண்டி எடுத்த கண்ணோடு உட்கார்ந்திருந்தார் முதுகப்பா. சுமார் 4.30 மணியளவில் இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் விரைந்து வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அந்த கண்ணை மீண்டும் வைக்க முடியாத நிலை உள்ளதாம்.












Click it and Unblock the Notifications