திமுக, அதிமுக, தேமுதிக கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு-பதட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நள்ளிரவில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா பாளையூர் கிராமத்தில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளின் கொடிக் கம்பங்கள்வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் அந்த கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் கந்தசாமி மற்றும் தேமுதிக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பிள்ளை ஆகியோர் போலீஸில் புகார் செய்தனர். திமுக தரப்பில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் அக்கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications