அரசு பள்ளியில் மதப்பிரச்சாரம்- விசாரணை

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் மதப் பிரச்சாரம் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரில் ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் ஊராட்சி நடு நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி நேரத்தில் மதப்பிரச்சாரம் செய்ததாக பாஜக புகார் கூறியது.

மேலும் இந்தப் பிரச்சனையில் கல்வி அதிகாரிகளும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பள்ளி முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் தேவகிராணி, குளித்தலை டிஎஸ்பி பாஸ்கர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த பள்ளியில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மதப்பிரச்சாரத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரமாக ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+