முஸ்லீம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு-சிரஞ்சீவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்வேன் என பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கலீல் தலைமையில் ஏராளமான முஸ்லீம்கள் சிரஞ்சீவி முன்னிலையில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணைந்தனர்.
அப்போது சிரஞ்சீவி பேசுகையில்,
எனக்கு சின்ன வயதில் இருந்தே ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. அவர்களுடன் நான் பள்ளிவாசல் சென்று தொழுதும் இருக்கிறேன்.
என்னிடம் முஸ்லீம் அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இட ஒதுக்கீடும் ஒன்று.
நான் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்வேன். நீங்கள் நான் முதல்வராவேன் நம்புகிறீர்கள், அந்த நம்பிக்கை வீண் போகாது என்றார்.












Click it and Unblock the Notifications